22 June 2011

இவர்கள் தான் காதியானி மதத்தினர்

இவர்கள் தான் காதியானி மதத்தினர்
முஹம்மத் உங்களின் ஆண்களில் எவருக்கும் தந்தையாக இருக்கவில்லை. மாறாக அல்லாஹ்வின் தூதராகவும், நபிமார்களில் முத்திரையாகவும் இருக்கிறார். அல்லாஹ் ஒவ்வொரு பொருளையும் அறிந்தவனாக இருக்கிறான். (அல்குர்ஆன் 33 : 40)

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : என்னுடைய உம்மத்தில் முப்பது பொய்யர்கள் தோன்றுவார்கள். ஒவ்வொருவரும் தான் நபி என்று வாதிடுவார்கள். நான்தான் நபிமார்களில் முத்திரையானவன். எனக்குப் பிறகு எந்த நபியும் கிடையாது.

அறிவிப்பவர் : ஸவ்பான் (ரலி) நூல் : திர்மிதி (2145)

அரபி மொழி செம்மொழியா?

கேள்வி 1 : இப்னு கஸீர் பாகம் 4, பக்கம் 719, சூரா யூசுஃப் விரிவாக்கத்தில் அரபி மொழி செம்மொழி என்றும் கருத்தை தெளிவு படுத்துவதில் மற்ற மொழிகளைவிட சிறந்த மொழி என்றும் அதனால்தான் இறுதி வேதம் அரபியில் அருளப்பட்டதென்றும் சொல்லப்பட்டிருக்கிறது. என்பதைக் குறிப்பிட்டு இதற்கான விளக்கத்தைக் கேட்டிருந்தீர்கள்.

நபிக்கு ஜனாஷா தொழுகை நடத்தியது யார்?

கேள்வி : 63 வருடம் வாழ்ந்த நபி (ஸல்) அவர்கள் மதீனாவில் வஃபாத் ஆனார்கள். அவர்கள் மரணித்த போது அவர்களுக்கு இமாமாக நின்று ஜனாஷா தொழுகை நடத்தியது யார்? நான் மார்க்க அறிஞர்கள் பலரிடம் கேட்டேன். யாரும் எனக்கு திருப்தியான பதில் சொல்லவில்லை. மலக்குமார்கள் தொழவைத்தார்கள் என்றும் ஆண்கள் ஒரு முறை ஜமாஅத்தாக நின்று தொழுதார்கள் என்றும் பெண்கள் ஒரு முறை ஜமாஅத்தாக நின்று தொழுதார்கள் என்றும் சிறுவர்கள் ஒரு முறை ஜமாஅத்தாக நின்று தொழுதார்கள் என்றும் பல விதமாகக் கூறினார்கள். இதற்கான தெளிவான விளக்கத்தை அளிக்குமாறு வேண்டிக் கொள்கிறேன்.
காதர் இப்ராஹீம்.
தில் : நபி (ஸல்) அவர்கள் மரணித்த போது அவர்களுக்கு எப்படி ஜனாஷா தொழுகை நடத்துவது என்பதில் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. பிறகு ஒவ்வொரு குழுவினராக சென்று நபியவர்களுக்காக தனித்தனியாக ஜனாஷா தொழுதார்கள். நபியவர்களின் ஜனாஷாவிற்கு எந்த ஒரு ஸஹாபியும் இமாமாக நின்று தொழுகை நடத்தவில்லை. இதனை பின்வரும் ஹதீஸ்களிலிருந்து அறிந்து கொள்ளலாம்.
அபு அஸீம் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களின் (ஜனாஷா) தொழுகையில் கலந்து கொண்டார்கள். நபியவர்களுக்கு எப்படி நாம் தொழுகை நடத்துவது என்று (ஸஹாபாக்கள் ஒருவருக்கொருவர்) கேட்டுக் கொண்டார்கள். பிறகு ஒவ்வொரு குழுவினராக உள்ளே நுழையுங்கள் என்று கூறினார்கள். அவர்கள் (நபியவர்களின் வீட்டின்) ஒரு வாசல் வழியாக உள்ளே நுழைந்து அவர்களுக்காக (ஜனாஷா) தொழுது விட்டு பிறகு மற்றொரு வாசல் வழியாக வெளியேறுபவர்களாக இருந்தார்கள்.
அறிவிப்பவர் : அபூ அஸீம் (ரலி) நூல் : அஹ்மத் (19837)
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் : நபியவர்கள் தம்முடைய வீட்டிலுள்ள கட்டிலின் மேல் வைக்கப்பட்டார்கள் . பிறகு மக்கள் தனித்தனி குழுவினராக நபியவர்களிடத்தில் நுழைந்து அவர்களுக்காக தொழுதார்கள். அவர்கள் தொழுது முடித்த பிறகு பெண்களை (தொழுவதற்காக நபியவர்களின் வீட்டிற்குள்) அனுமதித்தார்கள். அவர்கள் தொழுது முடித்தபிறகு சிறுவர்களை அனுமதித்தார்கள். நபியவர்களின் (ஜனாஷாவிற்கு) எந்த ஒருவரும் மக்களுக்கு இமாமாக நின்று தொழுகை நடத்தவில்லை.
நூல் : இப்னு மாஜா (1617)

01 March 2011

ஸகாத் أحكام الزكاة


தொடர் 1
இஸ்லாத்தின் ஐம்பெரும் கடமைகளில் மூன்றாவது கடமை ஸகாத் ஆகும். கடவுளை மற மனிதனை நினை என்பர் சிலர். இஸ்லாத்தைப் பொறுத்த வரை இவ்வாறு யாரும் கூற முடியாது. ஏனெனில் மனிதனுக்கு உதவுவதை ஐந்து கடமைகளில் ஒரு கடமையாக இஸ்லாம் வலியுறுத்துகிறது. இக்கட்டுரையில் 1. ஸகாத் கட்டாயக் கடமை 2. ஸகாத்தின் இம்மை மறுமை பயன்கள் 3. ஸகாத் வழங்காதோரின் மறுமை நிலை ஆகியவற்றைப் பற்றி விரிவாகக் காணவிருக்கின்றோம். நம்முடைய இந்தத் தொகுப்பில் ஸகாத் பற்றி வரக்கூடிய பலவீனமான ஹதீஸ்களை நாம் குறிப்பிடவில்லை. இன்ஷா அல்லாஹ் வரக் கூடிய இதழ்களில் ஸகாத் பற்றிய பலவீனமான ஹதீஸ்களை ஒரு தொகுப்பாக நாம் வெளியிடுவோம்.

02 February 2011

மதுரை ஸகாத் விவாதம் - ஒரு பார்வை


(மதுரை ஸகாத் விவாதம் தொடர்பான இந்த விமர்சனக் கட்டுரை 5.8.2009 அன்று ஆன்லைன் பிஜே யில் வெளியிடப்பட்டதாகும்)

ஆடிய ஆட்டமென்ன? ஓடிய ஓட்டமென்ன?
بَلْ نَقْذِفُ بِالْحَقِّ عَلَى الْبَاطِلِ فَيَدْمَغُهُ فَإِذَا هُوَ زَاهِقٌ وَلَكُمُ الْوَيْلُ مِمَّا تَصِفُونَ
 'உண்மையைப் பொய்யின் மேல் வீசுகிறோம். அது பொய்யை நொறுக்குகிறது. உடனே பொய் அழிந்து விடுகிறது. நீங்கள் (தவறாக) வர்ணிப்பதால் உங்களுக்குக் கேடுதான்.'
(
அல்குர்ஆன் 21:18)
وَقُلْ جَاءَ الْحَقُّ وَزَهَقَ الْبَاطِلُ إِنَّ الْبَاطِلَ كَانَ زَهُوقًا
'உண்மை வந்து விட்டது. பொய் அழிந்து விட்டது. பொய் அழியக் கூடியதாகவே உள்ளது.'
(
அல்குர்ஆன் 17:81)

மண்டியிட வைத்த தொண்டி விவாதம்


 (தொண்டி விவாதம் தொடர்பான இந்த விமர்சனக் கட்டுரை 3.12.2009 அன்று ஆன்லைன் பிஜே யில் வெளியிடப்பட்டதாகும்)

மண்டியிட வைத்த தொண்டி விவாதம்

கே.எம். அப்துந் நாசிர்கடையநல்லூர்
விவேகத்துடனும்அழகிய அறிவுரையுடனும் உமது இறைவனின் பாதையை நோக்கி அழைப்பீராக! அவர்களிடம் அழகிய முறையில் விவாதம் செய்வீராக! உமது இறைவன் தனது பாதையை விட்டு விலகியோரை அறிந்தவன்அவன் நேர் வழி பெற்றோரையும் அறிந்தவன். அல்குர்ஆன் 16:125
'நூஹே! எங்களுடன் தர்க்கம் செய்து விட்டீர்! அதிகமாகவே தர்க்கம் செய்து விட்டீர்! உண்மையாளராக இருந்தால் நீர் எங்களுக்கு எச்சரிப்பதை எங்களிடம் கொண்டு வாரும்!என்று அவர்கள் கூறினர். அல்குர்ஆன் 11:32
சத்தியத்தையும் அசத்தியத்தையும் தெளிவாகப் பிரித்துப் பார்ப்பதற்கு விவாதக் களம் காண்பதும் அவசியம் என்பதை மேற்கண்ட வசனங்கள் தெளிவுபடுத்துகின்றன.

இரண்டாம் ஜமாஅத்


(இந்த ஆய்வுக் கட்டுரை 23.11.2009 அன்று ஆன்லைன் பிஜே யில் வெளியிடப்பட்டதாகும் )
இரண்டாம் ஜமாஅத்
ஹதீஸ்களில் இல்லாத கருத்தை ஹதீஸ்களில் உள்ளது போல் காட்டுவதில் கைதேர்ந்த (தங்க நகை கட்டுரையில் இதை அம்பலப்படுத்தியுள்ளோம்.) இலங்கை நவ்பர் என்பார் ஒரு ஜமாஅத் முடிந்து மற்றொரு ஜமாஅத் நடத்துவது கூடாது என்றும் வாதிட்டு வருகிறார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட ஆராய்ச்சிக்குப் பதில் சொல்ல தவ்ஹீத் தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத்துக்கு ஞானம் இல்லை என்று குறிப்பிட்டுள்ளதால் முன்னுரிமை கொடுத்து இதை ஆய்வுக்கு எடுத்துக் கொள்கிறோம்.
இது குறித்து அப்துன்னாஸர் அவர்கள் ஏற்கனவே ஆய்வு செய்து வைத்திருந்தார். அதை தேவையான மாற்றங்களுடன் இங்கே வெளியிடுகிறோம்.

01 February 2011

மார்க்கத்திற்கு எதிரான மவ்­லிதுகள்

மவ்லித் என்பதின் பொருள் என்ன?
மவ்­லிது எனும் அரபிச் சொல்லி­ன் அகராதிப் பொருள் 'பிறந்த நேரம்' அல்லது 'பிறந்த இடம்' என்பதாகும். (ஆதாரம்: சுந்தரத் தமிழில் சுப்ஹான மவ்லித், பக்கம்: 8)
ஆனால் பிற்காலத்தில் இஸ்லாத்தில் நபியவர்கள் காட்டாத பித்அத்தான, அனாச்சாரமான காரியங்களை உருவாக்கியவர்கள் நபியவர்களை இறைவனுக்கு நிகராக உயர்த்தி கடவுளாக சித்தரித்து படிக்கும் கேடு கெட்ட கவிதைகளுக்கு மவ்­லிது எனப் பெயரிட்டுவிட்டனர். இதற்கும் உண்மை இஸ்லாத்திற்கும் எவ்விதச் சம்பந்தமும் இல்லை.

17 January 2011

சுப்ஹ் குனூத் ஓர் ஆய்வு

சுப்ஹ் குனூத் ஓர் ஆய்வு

அப்துந்நாஸிர் எம்..எஸ்.சி.
நாம் செய்யக்கூடிய வணக்க வழிபாடுகள் எதுவாக இருந்தாலும் அவை நபி (ஸல்) அவர்கள் காட்டித் தந்த அடிப்படையில் இருக்க வேண்டும். அதற்கு மாற்றமாக இருந்தால் அந்த வணக்கம் இறைவனிடம் ஏற்றுக் கொள்ளப் படாது. இன்றைக்கு நம்முடைய இஸ்லாமிய சமுதாயத்தில் பல்வேறு வணக்க வழிபாடுகளில் நபி (ஸல்) அவர்களின் தெளிவான சுன்னத்துகள் புறக்கணிக்கப்பட்டு பல பித்அத்தான காரியங்கள் நிறைந்து காணப்படுகின்றன. அவற்றில் ஒன்று தான் சுபுஹ் தொழுகையில் ருகூவிற்குப் பிறகு அல்லாஹம் மஹ்தினி என்று ஆரம்பிக்கக் கூடிய துஆவை குனூத்தாக ஓதுவதாகும்.

கூட்டுக் குடும்பமும் கூடாத நடைமுறைகளும்

கூட்டுக் குடும்பமும் கூடாத நடைமுறைகளும்
கே.எம். அப்துந் நாசிர்
இஸ்லாம் என்பது புற வாழ்க்கையிலும் அக வாழ்க்கையிலும் ஒழுக்க மாண்புகளைக் கற்றுத் தரக் கூடிய மார்க்கமாகும். 
ஒரு மனிதன் தன்னுடைய வாழ்வை சொர்க்கத்திற்குரிய வாழ்வாக அமைத்துக் கொள்ள வேண்டும் என்றால் அவனுடைய வெளிப்புற வாழ்க்கை மட்டுமல்லாது தன்னுடைய சுற்றத்தினரோடு கலந்து வாழ்கின்ற வாழ்க்கையையும் ஒழுக்கமான வாழ்க்கையாக

15 January 2011

கூட்டுக் குர்பானியைக் குழப்பும் குறைமதியினர்


கூட்டுக் குர்பானியைக் குழப்பும் குறைமதியினர் 
(நன்றி ஆன்லைன் பிஜே)
ஹஜ்ஜுப் பெருநாளில் நிறைவேற்றப்படும் முக்கியமான வணக்கம் குர்பானி கொடுப்பதாகும். இதற்கு அரபி மொழியில் உள்ஹிய்யா என்றும் கூறப்படும்.  உள்ஹிய்யா கொடுப்பதற்குத் தகுதியான பிராணிகள் ஆடு, மாடு, ஒட்டகம் ஆகியவைகளாகும்.

முன்மாதிரி முஸ்லிம் இல்லம்


முன்மாதிரி முஸ்லிம் இல்லம்
ஒரு மனிதன் இவ்வுலகில் பெறுகின்ற மிக முக்கியமான பாக்கியங்களில் ஒன்று வீடாகும். அதிலும் சொந்த வீட்டில் வசிப்பது என்பது மிகப் பெரும் பாக்கியமாகும். ஒரு சொந்த வீட்டைக் கட்டுவதற்காக, கட்டிய மனைவியைப் பிரிந்து பல்லாண்டுகள் பாலைவனத்தில் தன் இளமையைத் தொலைக்கும் மக்கள் கணக்கிலடங்காது. எலி வலையானாலும் தனி வலை வேண்டும், வீட்டை கட்டிப்பார், கல்யாணத்தை நடத்திப் பார் என்பதெல்லாம் வீட்டின் முக்கியத்துவத்தை உணர்த்துவதற்காக மனிதனால் உருவாக்கப்பட்ட பழமொழிகளாகும்.